Wednesday 3 December 2014

"செப்பாத அதிகாரம்..."

மௌனமும் கோபமும்
அழகான கேடயங்கள்

வார்த்தைகள்
அற்றுப்போன நிலை
இற்றுப்போன
மனநிலையைக் காட்டுகிறது.

கோபம்
எதுவும்
என்னைச்சுட்டெரிக்காமல்
சுயம்புவாய்
நானே எரிந்துகொள்ள
எனக்கு உதவுகிறது.

கண்ணகியின்
கோபத்திற்குப்பின்னே
கோவலனின் இழப்பும்
நீதி வழுவிய
நெடுஞ்செழியன் மட்டுமா
நிற்கின்றனர்?

நின்றது
அவளது வாழ்க்கை
தீக்கிரையான மதுரை
ஓர் குறியீடு...
உண்மையில்
அப்படி ஆனது...
அவளது வாழ்வு.

கண்ணகி
வாழ்க்கைப்பட்டதோடு சரி
வாழ்க்கை நிறைவின்றி...
ஆனால்
எத்தகு துன்பத்தையும்
இடம் மாற்றிப்போட்டு
இதமாக வாழ்ந்தாள்
மாதவி.
இதுதான்
இதுதான் இல்லறம்...
ஆம்...
வாழ்ந்தவர்களிடம்
வஞ்சினம் இருக்காது.
ஆனால்...
வாழாதவர்களிடம்
நீதி இருக்கும்...
நெஞ்சுரம் இருக்காது.

No comments:

Post a Comment