Friday, 28 November 2014

ஏழை

நாங்கள்
பாரதத்தாயின் பாதம்
ஆட்சி மாளிகையின்
அஸ்திவாரம்

இந்தியப்பட்டம்
இமயம் வரைப் பறக்க
நூலாய்இளைத்த
ஏழைகள்

அன்று
துன்பக்கடலில்
துயருற்றபோது
பயணப்படகுகளில்
பயணமானோம்
இன்றுதான் புரிகிறது
துடுப்புகளாகத்தான்
தூண்டப்பட்டோம் என்று

எங்களது
பாதை தெரியாததால்தான்
போதையில் தடுமாறுகிறோம்
எங்களுக்கும் இன்பத்திற்கும்
எட்டாத மீட்டர்
என்பதால்தான்
மில்லிகளில்
மிதக்கிறோம்


No comments:

Post a Comment