Friday, 28 November 2014

பெண்

தெய்வமாய் பூஜித்தவர்கள்
"கருவறையை" விட்டு
வெளிவர அனுமதிக்கவில்லை

பொக்கிஷமாய் நினைத்தவர்கள்
பூட்டியே பத்திரப்படுத்தினார்கள்

பூவாய் நினைத்தவர்கள்
பொருத்தமின்றி
நாரோடு கட்டிப்போட்டார்கள்.

யோகப்பொருளாகவும்
போகப்போகப்
போகப்பொருளாகவும்
நினைத்தார்கள்

ஆயிரம் காலத்துப்பயிருக்கு
இவள் ஒருத்தியின்
தாலியே வேலியாக்கப்பட்டது

ஆண்களின் கற்பு
அவசியமில்லாத ஒன்றானது

வெறும் வாய்க்கு
இவள் அவலானாள்
தெரு வாய்க்கும்
இவள் அவலானாள்

எல்லா நிலைகளிலும்
அவளது நிலை
அவலநிலை
ஆகிவிட்டது.

பெண்களின் சுதந்திரம்
பிரமிப்பை ஏற்பதுத்துகிறது
அந்த
பிரமிப்புகள் எல்லாம்
பிரமிடுகளின் மேல்தான்...

பாரதத்தாயைப்
பெண்ணாக பார்த்தவர்கள் தான்
இன்று
எய்ட்ஸ்க்குக் கூட
இவளே
எடுத்துக்காட்டானாள்.

No comments:

Post a Comment